Siluvaiyil Nintru Paainthodum Rattham | சிலுவையில் நின்று பாய்ந்தோடும் இரத்தம்

Siluvaiyil Nintru Paainthodum Rattham | சிலுவையில் நின்று பாய்ந்தோடும் இரத்தம்


தவக்காலப் பாடல்கள்,Thavakkala Paadalgal, Tamil Christian Songs, Tamil Christian Song Lyrics, Tamil song lyrics, Christian Songs.



சிலுவையில் நின்று பாய்ந்தோடும்
இரத்தம் உன்னோடு பேசலையா  --(2)
அன்பர் இயேசு உனக்காக பரிதாபமாக
தொங்கிடும் காட்சி காணலையா  - சிலுவையில் 

கோரமாம் சிலுவையை சுமந்து சென்று 
குருதியும் வடியுதே சிரசினின்று --(2)
உன் பாவம் போக்கவே தம்மையே தந்தார் --(2)
உனக்காக புது வாழ்வை அவரே ஈந்தார்  --(2)   -சிலுவையில் 

சிலுவையின் காட்சியைக் கண்ட நீயும் 
இயேசுவின் தழும்பினால் குணமடைவாய் --(2)
அவரை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வாயா --(2)
அதனாலே புது வாழ்வை நீ பெறுவாயா --(2)  -சிலுவையில்

Post a Comment

0 Comments