திருவிவிலியம்

திருவிவிலியம்

“Biblia” என்று கிரேக்க மொழியிலும் இலத்தீன் மொழியிலும், Bible என்று ஆங்கில மொழியிலும் குறிக்கப்படுகின்ற திருவிவிலியம் கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட நூல்களின் தொகுப்பாகும். திருவிவிலியம் என்பது ஒரு வரலாற்று நூலோ அல்லது ஒரு அறிவியல் நூலோ அல்ல. இது விவிலித்தில் சொல்வப்பட்டிருக்கின்ற இறை மக்களின் விசுவாச வாழ்வை உள்ளடக்கிய, பிரதிபலிக்கின்ற, விசுவாசத்தில் வாழ வழிகாட்டுகின்ற நூலாகும். இந்த விசுவாச நூலின் மையப் பொருளாக கடவுள் எவ்வாறு மனிதரை அன்புசெய்தார் என்றும் அதன் பலனாக மனிதர் எவ்வாறு கடவுளன்பிலும் பிறரன்பிலும் வாழ அழைக்கப்ட்டனர் என்பதையும் விரிவாக எடுத்துக் கூறும் நூல். சுருக்கமாக கடவுளின் மீட்புத்திட்டத்தில் மனிதர் எவ்வாறு பங்குபெற்று மீட்ப்புப் பெறலாம் என்பதை கூறும் மாண்பு மிக்க நூல்.
உலகத்திலேயே திருவிவியம் எனும் 'பைபிள்' தான் அதிக மொழிகளில் (சுமார் 2,100) மொழிபெயற்கப்பட்டு அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 500 கோடிக்கும் மேலான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
திருவிவிலியமானது இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுகிறது. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு.
பழைய ஏற்பாடானது கடவுள் எவ்வாறு இஸ்ரேயல் மக்களை அன்புசெய்து வழிநடத்தினார் என்பதையும் அதற்கு இஸ்ரேயல் மக்கள் எவ்வாறு பதிலன்பு செய்தார்கள் என்பதையும் உடன்படிக்கை, மற்றும் இறைவாக்கினர்கள் வழியாக கடவுள் மனிதருக்குத் தந்த மீட்புத் திட்டத்தையும் விளக்கிக் கூறும் நூல்களை உள்ளடக்கியது.
புதிய ஏற்பாடானது, கடவுள் எவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாக புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார் என்பதையும், மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பல்வேறு போதனைகள், சிந்தனைகள், செயல்கள் மனிதருக்கு எவ்வாறு மீட்ப்பைக் கொண்டுவந்தன என்பதையும், புனித பவுல் எவ்வாறு ஆதி கிறிஸ்தவர்களை கிறிஸ்தவ விசுவாசத்தில் வழிநடத்தினார் என்பதையும், திருவெளிப்பாடு என்னும் நூல் வேத கலாபனை ஏற்பட்ட காலத்தில் அந்த மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய எண்கள், அடையாளங்கள் வழியாக அவர்களை விசுவாசத்தில் வாழ, வளர புனித யோவான் அவர்களை எவ்வாறு உற்சாகப்படுத்தினார் என்பவற்றை கூறும் நூல்களை உள்ளடக்கியது.


விவிலியம் படிக்க  Click Here

Post a Comment

0 Comments